இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செய்திப்

பணிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தி, தூஷித்தார் என  குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் தரங்கா மஹவத்த இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மாநகர சபை உறுப்பினர் லால் பீரிஸை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், அவரது வெளிநாட்டு பயணத்தையும் தடை செய்யுமாறு உத்தரவிட்டார்.
 
2007 இல் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு எதிராக, ஒரு கும்பலுடன் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து செய்திப் பணிப்பாளரை தாக்கப் போவதாக அச்சுறுத்தியதற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
சந்தேக நபரான மேர்வின் சில்வாவை 500,000 ரூபா  சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
 
 
 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி