சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.


மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி நேற்று (27) இரவு நாட்டை வந்தடைந்ததாக ´அத தெரண´ விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்கிழமை நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி, சிங்கப்பூருக்கு விஜயம் செய்த பின்னர் ஜப்பான் சென்றிருந்தார்.

ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய பிரதமர் மற்றும் நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

அத்துடன், அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல வர்த்தக சந்திப்புகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இலங்கையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் பிரதிப் பிரதமர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி