மொனராகல, வெலிஓயா பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்தின் 32 வயதுடைய சாரதி உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்பகல்லவிலிருந்து மொனராகல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, சுற்றுலா சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி, 32 வயதுடைய தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் மொனராகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.