விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க

தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாமர சம்பத்தின் கைது தொடர்பில் கேள்வி எழுவதாகவும், பாராளுமன்றத்திடமிருந்தும் ஒரு விசாரணையை அவர் கோர வேண்டும் எனவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நான் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தேன். தான் பிரதமராக இருந்த காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எனது ஒப்புதலுடன், அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அந்த சுற்றறிக்கையில் மாகாண சபை நிதியை வைப்பு கணக்குகளில் வைப்பு செய்ய முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்ற பணத்தைப் போலவே அரசாங்கப் பணமும் அந்த வருடத்திற்குள் செலவிடப்பட வேண்டும் என கூறப்பட்டது. இல்லையெனில், நிதி அமைச்சுக்கு அல்லது மாகாண சபையின் நிதி அமைச்சுக்கு அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டியிருக்கும்.

அந்தப் பணத்தைச் சேமித்து, வைப்புத் தொகைக் கணக்குகளில் வைத்து, பின்னர் அதை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பதால் நாங்கள் அந்த நடவடிக்கையை எடுத்தோம். அந்த நேரத்தில், முதலமைச்சராக இருந்த சாமர சம்பத் மற்றும் பல முதலமைச்சர்கள் என்னிடம் பேசினர்.

இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, அவர்கள் அந்த பணத்தை வைப்பு கணக்குகளில் இருந்து எடுத்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் ஊவா மாகாணத்தில் மட்டுமல்ல, பிற மாகாணங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சாமர சம்பத் அவ்வப்போது என்னை தொலைபேசியில் தொடர்புகொள்வார்.

நான் கல்வி வேலை போன்றவற்றில் அவருக்கு உதவி செய்தேன். ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் எதிர் பக்கங்களில் இருந்தோம். சாமர சம்பத் முதலமைச்சராக இருந்தபோது தற்போதைய அமைச்சர் சமந்தா வித்யா ரத்ன ஒரு முறைபாட்டை என்னிடம் வழங்கினார்.

இது என்னுடைய வேலை இல்லை என்றும், இது குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணையத்துடன் விவாதிக்க வேண்டும் என்றும் அவரிடம் சொன்னேன். முதலமைச்சர்களின் பணிகளில், அவர்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நான் ஈடுபட முடியாது என்றும் கூறினேன்.

இந்த விவகாரம் குறித்து ஆணையம் விசாரணை நடத்தியது. எந்த விசாரணையிலும் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. அவர் ஒரு சந்தேக நபராகக்கூட அறிவிக்கப்படவில்லை. அந்த விடயங்கள் குறித்தே  தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

புதிய குற்றச்சாட்டுகள் அல்லது புதிய சம்பவங்கள் குறித்து அல்ல. வேறு பிரச்சினை என்னவென்றால், சாமர சம்பத் வாக்குமூலம் அளித்தவுடன் கைது செய்யப்பட்டதாக அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நாடாளுமன்றத்தில் அடிக்கடி பேசுகிறார். அவர் எதிர்க்கட்சியின் வலுவான குரலாக இருக்கிறார். இந்த விடயத்தில் அவர் நாடாளுமன்றத்திடமிருந்தும் ஒரு விசாரணையைக் கோர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது பாராளுமன்ற சிறப்புரிமை மீறலா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்” என ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி