பிரிட்டன் விதித்திருக்கும் தடையால் தனது அரசியலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என
விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
தான் எந்தவித மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லையென தெரிவித்துள்ளார்.
“நான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை. அதனால் இந்த தடை என்னை பாதிக்காது. எனது அரசியலையும் பாதிக்காது. நான் அப்படியெல்லாம் செயற்பட்டிருந்தால் நான் அங்கு தஞ்சமடைந்த காலப்பகுதியில் பிரிட்டன் என்னை கைது செய்திருக்கலாமே? ஏன் என்னை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டும்? அப்போது இவையெல்லாம் தெரியவில்லையா? இவற்றைப் பற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை” என்று, கருணா அம்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
-தமிழன்