நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர நிலை சற்று மோசமான நிலைகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் 6 நகரங்களில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, காலி, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இவ்வாறு காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக காற்று மாசுபாட்டினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.