முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, மாவட்ட வாரியாக கிளிநொச்சிக்கே அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்கா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது உரையில் அவற்றை பொதுமக்களும் அறியக் கூடிய விதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
2024 ஜனவரிக்குப் பின்னர் 362 அனுமதிப்பத்திரங்களும் 174 FL4 அனுமதிப்பத்திரங்களும் அப்போதைய ஜனாதிபதியின் கீழிருந்த நிதியமைச்சின் மூலமாக வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.