(எச்.எம்.எம்.பர்ஸான்)
சில்லறைக் கடை ஒன்றை
உடைத்து அங்கிருந்த பொருட்களைத் திருடி வேறு கடை ஒன்றுக்கு விற்பனை செய்ய சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி பகுதியிலுள்ள சில்லறைக் கடை ஒன்றில் திங்கட்கிழமை இரவு (2) திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்து.
இந்நிலையில், திருட்டு இடம்பெற்ற கடையை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார நேரில் சென்று பார்வையிட்டு திருடர்களை பிடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், பொருட்களை திருடிய இருவர் பொருட்களை ரிதிதென்னை பகுதியிலுள்ள கடை ஒன்றுக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.