நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில்
உணவு எடுக்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.
பாராளுமன்றத்தில் உணவு பொது சந்தையில் நிலவும் விலைக்கே வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்றம் வந்த முதல் நாளிலிருந்தே தாம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவு உண்பதில்லை, உத்தியோகபூர்வ வீடுகளை எடுப்பதில்லை என நாங்கள் அறிவித்துள்ளதாக சிலரை நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி காலத்தில் அமைச்சர்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வர முடியாது என்று கூறிய அவர், உலகில் உள்ள அனைத்து நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு வழங்குவதாகவும், உணவு சாதாரணமாக வழங்கப்பட வேண்டும் என்று தனது கட்சி கூறுவதாகவும் கூறினார்.