தேர்தல் விதிமுறைகளை மீறி
கற்பிட்டி அல்மனார் வாக்குச் சாவடிக்கு அருகில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்த பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வேட்பாளரிடம் காணப்பட்ட 97,200 ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.