அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய குடியிருப்புகளின் பாதுகாப்புக்காக நேற்று (12) முதல் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டதாக நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாக, அமைச்சுகளின் தலைவர்களின் அறிவித்தலின் பிரகாரம், அரச பங்களாக்களுக்கு இராணுவத்தினர் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அரசாங்கம் வழங்கிய 28 வீடுகளும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறுகிறது.

அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட. குடியிருப்புகளின் உடைமைகள் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி