கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் 15 மோசடி மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான 3,040 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் கோசல விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
உள்ளக கணக்காய்வு செயல்முறையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மோசடி மற்றும் ஊழல்கள் நடந்ததா என்பதைக் கண்டறிய 15 விடயங்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம் என்றார்.