உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்
தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்று அங்கு ஆஜராகவில்லை.
இம்மாதம் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் ஒரு திகதியை தமக்கு ஒதுக்கினால் தன்னால் வர முடியுமென குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.