2022/2023 காலப் பகுதியில்

இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டபோது இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் களஞ்சியசாலை தலைவர் டி.ஜே.ராஜகருணா ஜனாதிபதியின் செயலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உடனடியாக செயற்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் ஏற்கனவே அடிப்படை உண்மைகளைக் கேட்டறிந்து அதற்கான பதிலையும் பெற்றுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, கூட்டுத்தாபனத்தின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் கணக்காய்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி