எம்மீது கருணை காட்டி பாராளுமன்ற
தேர்தலுக்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
பாணந்துறை களுதேவல பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அடுத்த தசாப்தத்தை நாங்கள் தீர்மானிக்கும் காரணியாக ஆக்குகிறோம். நீங்கள் கடினமான நேரத்தில் இருக்கிறீர்கள். தலைவர் கட்சியை விட்டு வெளியேறியதால் கட்சியினர் ஏமாற்றமடைந்தனர். ஜனாதிபதி தேர்தலின் போது அவர் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லவில்லை.
எனவே, இந்தத் தேர்தலில் எங்கள் மீது கருணை காட்டி வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள். அப்படி நடந்தால், அரசியல் ரீதியாக யாரும் எதிர்பார்க்காத முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அடுத்த ஐந்து வருடங்களில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு யார் சவாலாக இருப்பார்கள் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவா? நாமல் ராஜபக்க்ஷவா? சஜித் பிரேமதாசாவா என கேட்பதாவும் நாமல் தெரிவித்துள்ளார்.