கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில்
இன்று (08) பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி-யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில் உள்ள அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அக்குறணை நகரின் ஊடாக பாயும் பிரதான ஓயா மற்றும் வஹகல ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் அக்குறணை நகரின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியதுடன் மேலும் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
கண்டி - யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நகரம் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது.