லக்கல பொலிஸ் பிரிவுக்கு

உட்பட்ட ஹத்தோட்ட அமுன பிரதேசத்தில் மாணிக்கக் கல தோண்டிக் கொண்டிருந்த ஒருவர் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ஹத்தோட்டை அமுன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 
 
உயிரிழந்தவர் உட்பட மேலும் நால்வர் தனியார் காணி ஒன்றில் மாணிக்கக்கல் சுரங்கம் தோண்டிய போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
சடலம் லக்கல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
 
லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி