முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீடு பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய சீருடைகளின் பாகங்கள் மற்றும் வாசகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியும் நோக்கிலேயே சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தேடுதல் அனுதியின் அடிப்படையில், இந்த பொலிஸ் அதிகாரிகள் குழு வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியது.
ஆனால் அப்போது சுஜீவ சேனசிங்க அங்கில்லை. பணியாளர் மட்டுமே இருந்துள்ளார்.
குறித்த தேடுதல் நடவடிக்கைகள் இரண்டு மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டு பணியாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுஜீவ சேனசிங்க குருந்துவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், தான் வீட்டில் இல்லாதபோது பொலிஸ் குழு என கூறிக்கொண்டு சிலர் தனது வீட்டை சோதனையிட்டதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் உண்மையாகவே பொலிஸ் அதிகாரிகளா என்பதை கண்டறியுமாறும் முறைப்பாட்டின் மூலம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.