(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட
பிரதமர் ஹரிணி அமரசூரிய
இன்று திங்கட்கிழமை(4) மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார்.
பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதன் போது தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி)கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டார்.

மேலும் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்கலாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பிரதமரின் வருகையை ஒட்டி மன்னார் நகர பகுதியில் பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டது.மேலும் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.