அவுஸ்திரேலியருக்கு சொந்தமான
21 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவனப் பங்குகளை போலியான அதிகாரத்தை முன்வைத்து முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எழுத்துமூல ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதன்போது, குற்றஞ்சாட்டப்பட்ட உதய கம்மன்பில நீதிமன்றில் முன்னிலையாகியதுடன், மற்றைய குற்றஞ்சாட்டப்பட்ட சிட்னி ஜயரத்னவ சுகயீனமடைந்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான எழுத்துபூர்வ ஆட்சேபனைகளை நவம்பர் 25 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது.
1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த குற்றத்தை செய்ததாக உதய கம்மன்பில உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.