அரச ஊழியர்களின் சம்பளத்தை
அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சர் என்ற ரீதியில் தான் மேற்கொண்ட சட்டரீதியான அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டதாகவும் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாவிட்டால் அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (23) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.