அவிசாவளை பொலிஸ் எல்லைக்கு
உட்பட்ட திவுரும்பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 28 பேர் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

