பூகொட மற்றும் ஹங்வெல்ல

பிரதேசங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியான 'லலித் கன்னங்கர'வின் பிரதான சகாக்கள் எனக் கூறப்படும் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவரான  'இரேஷ்' என்பவர் 5 கிராம் ஐஸ் போதைப்பொருள், வாள் மற்றும் கையடக்கத் தொலைபேசியுடன் ஹங்வெல்ல  பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றைய சந்தேக நபரான 'கட்டுகொட இந்திக்க' வெலிகன்ன - வாக பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

12 போரா துப்பாக்கி, 06 தோட்டாக்கள், 13.6 கிராம் ஹெரோயின், 10 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 1174 லீற்றர் கோடா, 1016 லீற்றர் எரிந்த கோடா, ஒரு எரிவாயு சிலிண்டர் மற்றும் 2 செப்புச் சுருள்கள் மற்றும் 20,000.00 ரூபா பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி