leader eng

ஜனாதிபதி பதவியிலிருந்து

ஓய்வு பெற்றபோது தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனவும், தற்போது காணி விற்று வாழ்ந்து வருவதாகவும்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர்,  அரசாங்கத்திடம் இருந்து எதையும் பெறப் போவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தனக்கு ஒன்பது வருடங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் யாரிடமிருந்தும் சாப்பிடவில்லை. எங்களிடம் இருப்பதை மட்டுமே மற்றவர்களுக்குக் கொடுத்தோம். நான் ஜனாதிபதியாக இருந்து வீட்டுக்குச் சென்றபோது, ​​​​என் வங்கிக் கணக்கு உண்மையில் ஓவர் டிராஃப்ட்  ஆனது, பின்னர்.

எனக்கு அரசாங்கத்திலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. .மஹிந்த ராஜபக்க்ஷவின் ஒன்பது வருட காலத்தில் எனக்கு ஓய்வூதியம் கூட வழங்கப்படவில்லை.

எனக்கு அரசு வீடும், 4 வாகனங்களும் கிடைத்தன. நான் பயணிப்பதற்கு ஒரு ஜீப்பும்  காரும் எனது  பாதுகாவலர்களின் பயன்பாட்டுக்கு இரு வாகனங்கள் உள்ளன, அவைகளை  அரசாங்கம் பறித்தால் பஸ்ஸில் செல்ல நான் வெட்கப்பட மாட்டேன் என்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி