leader eng

மின்சாரக் கட்டணக் குறைப்பு

தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், புதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

6 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆனால் எதிர்பார்த்தபடி அது நடைபெறவில்லை என்றும் தலைவர் காரணம் கூறினார்.

மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என இலங்கை மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி