கல்கிஸை படோவிட்ட  குதியில்

இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த நபர் படோவிட்ட பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாக சுடப்பட்டுள்ளார்.
 
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
 31 வயதுடைய தரிந்து மதுஷன் சுவாரிஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
 
துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவில்லை.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி