leader eng

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

அரசியல் சூழ்ச்சி மூலம் பதவியில் இருக்கச் சதி செய்வதாக குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இது 2022 மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களைப் போன்று வன்முறைக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவும் இலங்கைக்கான தனது தூதுவரும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். 
 
சில காரணங்களால் சஜித் பிரேமதாச இதற்கு இணங்கவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க சஜித்தை அம்பலப்படுத்துகிறார். தலதா நீக்கப்பட்டார், மேலும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு கட்சிகள் விலகும் என்று கேள்விப்படுகிறேன். இதனால் யார் பலவீனமடைவார்கள்?” என அண்மையில் ஐக்கிந மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறியமை தொடர்பில் வீரவன்ச கேள்வி எழுப்பினார். 
 
கட்சித் தாவல்கள் பிரேமதாசாவை பலவீனமான நிலைக்கு தள்ளும் என்றும், அது மூன்றாம் தரப்புக்கு அது உதவும் என்றும் அவர் கூறினார்.
 
இந்த குறிப்பிட்ட மூன்றாம் தரப்பினர் தேர்தலுக்கு முன்னர் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு கூட்டுச் சேர்ந்து கொண்டிருப்பதாகவும், இது இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரசியலமைப்பின் சில விதிகளின் கீழ் பதவியில் நீடிக்க உதவும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார். 
 
அடுத்த ஜனாதிபதி பதவியேற்கும் வரை தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருப்பார் என அரசியல் சாசனம் கூறுகிறது எனவும் வீரவன்ச தெரிவித்துள்ளார். 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி