பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகவும், 10 கி.மீ., ஆழத்திலும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது என்று, பாகிஸ்தானின் தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
மிதமான நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
பாகிஸ்தானில் கடந்தாண்டு மட்டும் கிட்டத்தட்ட 167 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தும் குறைந்த அளவிலான அதிர்வுகள் கொண்டவையாகும்.
அதாவது ரிக்டர் அளவுகோலில் 1.5 மற்றும் அதற்கு மேலாக பதிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.