குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை நாளை (27) முதல் உரிய
வங்கிக் கணக்குகள் மூலம் கிடைக்கும் என, நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தகுதி பெற்ற 212,423 குடும்பங்களுக்கான நிலுவைத் தொகையை வங்கியில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சபையின் தவிசாளர் ஜயந்த விஜேரத்ன சுட்டிக்காட்டுகிறார்.
1,314,007,750க்கு மேல் உள்ள நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு, நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.